தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழையும், 5 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம்  தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிவிப்பில் தமிழகத்தின் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சை, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான மழையும், அதே நேரம் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கடலூர், பெரம்பலூர், நாமக்கல், ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். சேலம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை எதிர்பார்க்கலாம்.

சென்னையைப் பொறுத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்’ இவ்வாறு சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Spread the love

Leave a Reply